கொட்டாவையில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது
கொட்டாவை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட மூவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2 இலட்சம் ரூபா லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு
கொட்டாவை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இவர்களுக்கு எதிரான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், நாளை (09) நீதிமன்றத்தில் முன்னிலைத்தப்படவுள்ளதாகவும் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |