தென்னிலங்கையில் தொடரும் படுகொலைகள்: ஒரே நாளில் இருவர் சுட்டுக்கொலை!
தென்னிலங்கையில் ஒரே நாளில் இருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இந்தச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
கம்பஹா - கந்தானை பிரதேசத்தில் நேற்று (30.07.2023) இரவு முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கந்தானையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 38 வயது நபரே துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே சாவடைந்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
தனது முச்சக்கரவண்டியில் வீடு திரும்பிய குறித்த குடும்பஸ்தர் வீட்டு வாசலில் வைத்துச் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர், முச்சக்கரவண்டி சாரதியைச் சுட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளனர் என்று விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த முச்சக்கரவண்டி சாரதியின் சடலம், கந்தானை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு, வாழைத்தோட்டத்தில் இளைஞர் ஒருவர் நேற்று (30.07.2023) மாலை சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர்கள் கைது
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர், வீதியின் அருகில் நின்றிருந்த இளைஞரைத் துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.
வாழைத்தோட்டம் பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய குறித்த இளைஞர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan
