குடும்பத்துடன் கொழும்பு சென்ற தமிழ் குடும்பம் - பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்
ரயிலில் மோதுண்டு மற்றும் ரயிலில் இருந்து விழுந்து 2 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய, பட்டிபொல பொலிஸ் பிரிவில் உள்ள பரகும்புர மற்றும் அம்பேவெல ரயில் பாதையை ஆய்வு செய்யச் சென்ற ரயில்வே உதவியாளர் ஒருவர் ரயிலில் மோதி உயிரிழந்தார்.
நேற்று அதிகாலை ரயில் பாதையை ஆய்வு செய்து கொண்டிருந்தபோது கொழும்பிலிருந்து பதுளை நோக்கிச் செல்லும் ரயிலில் மோதி அவர் உயிரிழந்தார்.
ரயில் விபத்து
உயிரிழந்தவர் தியத்தலாவை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மன்னார் உயிலங்குளம் பகுதியில் ரயிலில் இருந்து விழுந்து ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.
இளைஞன் பலி
உயிரிழந்தவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் தலைமன்னாரிலிருந்து கொழும்பு செல்லும் ரயிலில் பயணித்த நிலையில் ரயிலில் இருந்து இறங்க முயன்றுள்ளார்.
இதன் போது ரயிலில் இருந்து விழுந்த நபர் பலத்த காயமடைந்து மன்னார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.





பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

இத்தனை கோடிக்கு விலை போய்யுள்ளதா மதராஸி படம்.. தமிழ்நாட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன் Cineulagam
