யாழில் கசிப்புடன் இருவர் கைது
யாழ்ப்பாணத்தில் (Jaffna) கசிப்புடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இக்கைது நடவடிக்கை நேற்று (22) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றில் முன்னிலை
இதன்போது, இரண்டு சந்தேகநபர்கள் கோப்பாய் மத்தி பகுதியில் நீண்டகாலமாக கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்றையதினம் முன்னெடுத்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 10 லீற்றர்கள் கசிப்புடன் இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து, அவர்கள் சான்றுப் பொருட்களுடன் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் பாரம் கொடுக்கப்பட்டுள்ளனர்.
மேலும், அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்திய ரஃபேல் விமானம் பாகிஸ்தான் வீழ்த்தியதா... முதல் முறையாக பிரெஞ்சு உற்பத்தியாளர் விளக்கம் News Lankasri

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan

இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri
