தமிழரசுக் கட்சியின் தலைமை பதவிக்கு குறிவைக்கும் மூவர்: மாவையின் பரபரப்பு தகவல் (Video)
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமை பதவிக்கு, நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் சிறிதரன் ஆகியோர் குறிவைத்துள்ளதாக தமிழரசுக் கட்சியின் தலைவரும் மூத்த அரசியல்வாதியுமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழ் ஊடகத்தின் நேர்காணலின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தலைமைப் பதவி
இது தொடர்பில் மேலும் கூறுகையில், தமிழரசுக் கட்சியின் தலைமை பதவிக்கு சுமந்திரன் மற்றும் சிறிதரன் அவர்களோடு வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானமும் குறி வைத்துள்ளார்.
தமிழரசுக் கட்சியின் தலைமை பதவிக்கு வரலாற்றில் ஒன்றுமில்லாதவாறு போட்டி நிலவுகின்றது.
அத்துடன், தலைமை பதவி குறித்த நகர்வுகளில், சிறிதரன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் கடந்த தேர்தலின் போதே களமிறங்கிவிட்டனர்.
உதவியமைக்கான காரணம்
மேலும் சுமந்திரனை வெல்ல வைப்பதற்கு, சிறிதரன் உதவியமைக்கான காரணமும் தலைமை பதவியை குறிவைத்ததாகவே அமைந்தது.
தலைமை பதவியைக் குறிவைத்து, குறித்த மூன்று பேரும் பல்வேறு நகர்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.“என கூறியுள்ளார்.

பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri

ஆயுத ஏற்றுமதியில் சாதனை படைத்த நாடு - ஜேர்மனி, இந்தியா உட்பட பல நாடுகள் முக்கிய வாடிக்கையாளர்கள் News Lankasri
