சைவ ஆலயங்களில் சிலையை பாதுகாப்பதற்கு படையை வைத்திருக்க வேண்டும்: மாவை சேனாதிராஜா சீற்றம்
சிலையை வைத்திருக்கிறீர்கள் அதனை பாதுகாப்பதற்கு ஒரு படையை வைத்திருக்க வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
யாழ்.மருதங்கேணி மாசார் எல்லை பகுதி மருத ஈஸ்வரர் ஆலயத்தில் இடம்பெற்ற விழாவில் நேற்றையதினம் (30.04.2023) கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்தாவது, நீங்கள் இங்கு ஒரு சிலை வைத்திருக்கின்றீர்கள் ஆனால் இந்த சிலையை பாதுகாக்கவும் ஒரு படையை வைத்திருக்க வேண்டும்.
நாட்டினுடைய கலாசாரம்
இதேவேளை அண்மைக்காலமாக சைவர்கள் ஆலயங்களில் வழிபடும் போது அடுத்த நாள் அந்த சிலை இருக்குமா என்று நினைத்துக் கொண்டே வழிபடுகின்றார்கள்.
இந்த நாட்டினுடைய கலாசாரம் அவ்வாறே வளர்க்கப்பட்டுள்ளது. எனவே சிலையை வைத்திருக்கிறீர்கள் அதனை பாதுகாப்பதற்கு ஒரு படையை வைத்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri
