பருத்தித்துறையில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி
பருத்தித்துறையில் மேலும் இருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
மேல் மாகாணத்திலிருந்து வந்த இருவருக்கே கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்டம், வத்தளையிலிருந்து சொந்த வீட்டுக்கு வந்திருந்த தாயும், மகளும் பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.
அவர்களிடம் பெறப்பட்டிருந்த உயிரியல் மாதிரிகள் இன்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதே கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களுடன் சேர்த்து வடக்கு மாகாணத்தில் இன்று 9 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ். கொரோனா ஆய்வு கூடங்களில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனைகளின் போதே 9 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

Brain Teaser Challenge: மனதை குழப்பும் புதிர்- 7 வினாடியில் திருடனின் மனைவியை கண்டுபிடிக்க முடியுமா? Manithan

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri
