ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் படி மேலும் இரண்டு நியமனங்கள்
ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மேலும் இரண்டு நியமனங்களை வழங்கியுள்ளார்.
இதன்படி, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக (ஊடகங்கள்) பேராசிரியர் சுனந்த மத்துமபண்டாரவும், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக (சர்வதேச ஊடகம்) பேராசிரியர் ஷேனுகா செனவிரத்னவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சுனந்த மத்துமபண்டார
பேராசிரியர் சுனந்த மத்துமபண்டார, களனிப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரும், பொருளாதாரப் பிரிவின் தலைவராகவும் சமூக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதியாகவும் பணியாற்றியுள்ளார்.
அவர் மாநில ஊடக அமைச்சின் செயலாளராக பணியாற்றியுள்ளார் மற்றும் அரசாங்க செய்திகளின் பணிப்பாளர் நாயகமாகவும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அபிவிருத்தி மற்றும் தொடர்பாடல் பணிப்பாளர் நாயகமாகவும் பதவி வகித்துள்ளார்.
ராஜபக்சக்களுடன் தொடர்புடைய புதிய அரசாங்கம்! ஆபத்தினை எதிர்கொள்ளும் இலங்கை அரசியல்: எச்சரிக்கும் பிட்ச் தரப்படுத்தல் |
ஷேனுகா செனவிரத்ன
சர்வதேச ஊடகத்துறையின் தலைவரின் சிரேஷ்ட ஆலோசகர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள ஷேனுகா செனவிரத்ன, நாட்டின் இராஜதந்திர விவகாரங்களில் அதிக அனுபவமுள்ள சிரேஷ்ட அதிகாரி என்பதுடன் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பதவியையும் வகித்துள்ளார். .
ஷேனுகாசெனவிரத்ன, ஐக்கிய இராச்சியம், தாய்லாந்துக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர்
ஜெனீவா மற்றும் நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் தூதுவராகவும் நிரந்தரப் பிரதிநிதியாகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருதய நிலக் கோட்பாடும் மத்திய கிழக்கு யுத்தமும் 6 மணி நேரம் முன்

2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகம் இப்படித்தான் இருக்கும் - வெளியான புகைப்படங்கள் News Lankasri

போதைப் பொருள் வழக்கில் கைதான ஸ்ரீகாந்த், கிருஷ்ணா அப்படிபட்டவர்கள்... சீமான் பரபரப்பு பேச்சு Cineulagam
