இரண்டு மில்லியன் கனமீட்டர் கடல் மணலை அகழ்ந்தெடுக்க எதிர்பார்ப்பு
இவ்வருடம் இரண்டு மில்லியன் கனமீட்டர் கடல் மணலை அகழ்ந்தெடுக்க எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
கழுவி சுத்திகரிக்கப்பட்ட கடல் மணலை பொதுமக்களுக்கு மலிவு விலையில் விற்பனை செய்யுமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கு ஆலோசனை வழங்கியதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கடல் மணல் அகழ்வுத் திட்டம்

இந்த கடல் மணல் அகழ்வுத் திட்டத்தினால் கொழும்பு தொடக்கம் நீர்கொழும்பு வரையான கடற் கரையோரப் பகுதிகளில் வாழும் மீனவர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
எனவே பாதிப்புக்குள்ளாகும் மீனவ சமூகத்தின் முன்னேற்றத்திற்காக அந்த மீன்பிடி பகுதிகளில் உள்கட்டமைப்பு அபிவிருத்தி தொடர்பில் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை ஏற்படுத்திக் கொள்ளுமாறும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவுறுத்தியுள்ளார்.
குறைந்த விலையில் விற்பனை

முத்துராஜவெல கடற்கரையிலிருந்து நீர்கொழும்பு வரை 10-15 கிலோமீட்டர் தூரத்தில் கடலில் இருந்து நிலத்திற்கு கடல் மணல் அள்ளப்படுகிறது.
கடலில் இருந்து பம்ப் செய்யப்படும் மணலை நிலத்திற்கு கொண்டு வந்து, மணல் மேடாக திறந்த வெளியில் சேமித்து, இயந்திரத்தில் மணலை செலுத்தி, கழுவி, சுத்தம் செய்து, தேர்வு செய்து உலர்த்தும் பணி நடக்கிறது.
பொறியாளர்களின் மேற்பார்வையில் உவர்தன்மை இல்லாத கடல் மணலை கழுவி சுத்தம் செய்து உலர்த்தி தேவையான தரத்தில் தயார் செய்து அதன்பின்னர் கெரவலப்பிட்டி - முத்துராஜவெல மணல் விற்பனை நிலையத்தில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri