மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து! இருவர் பரிதாபமாக பலி
நிர்மாணப் பணியில் உள்ள மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
நாரம்மல, எபலவத்த பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தில் மோட்டார் சைக்களில் பயணித்த இருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தின் பின்னர் குறித்த இரண்டு வாகனங்களும் தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.