நீரில் மூழ்கி இராணுவ வீரர் உள்ளிட்ட இருவர் மரணம்
வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற சம்பவங்களில் நீரில் மூழ்கி இராணுவ வீரர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.
மஹவெல – ரஜ்ஜம்மத பிரதேசத்தில் உள்ள சுது கங்கையில் நீராடச் சென்றவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி மீட்கப்பட்ட நிலையில், நாலந்த வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
பாமுல்ல - கிஹிலுவ பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதான இராணுவ வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் தாம் பணியாற்றிய இராணுவ முகாமின் அதிகாரிகள் குழுவுடன் மஹவெல
பகுதிக்குச் சென்றபோது அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
விசாரணைகள்
இதேவேளை, கல்கிரியாகம - உஸ்ஸான பாலத்துக்கு அருகில் உள்ள ஹவன்வெல்ல ஓயாவில் நீராடச் சென்றவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி ஆபத்தான நிலையில் கலேவெல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 37 வயதுடைய உஸ்ஸான, தேவஹுய பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் கலேவெல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கல்கிரியாகம பொலிஸ் நிலையத்துக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

இறந்த பின்னர் இப்படிதான் இருக்கும் - இறந்து 8 நிமிடங்கள் கழித்து உயிர் பிழைத்த பெண் கூறிய விடயம் News Lankasri

அதிகம் ட்ரோல் செய்யப்படும் தக் லைப்.. ஆனாலும் மணிரத்னம் உடன் இணைய காத்திருக்கும் முன்னணி ஹீரோ Cineulagam

மீண்டும் ஒளிபரப்பாக போகிறது சன் டிவி-ல் ரசிகர்கள் கொண்டாடிய ஹிட் சீரியல்.. எந்த தொடர் தெரியுமா? Cineulagam
