கடற்றொழிலாளர் பிரச்சினை: இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
இந்திய - இலங்கை கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பாக தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தாலும் கூட இரு நாட்டு அரசாங்கங்களும் பாரா முகமாக இருப்பது வேதனையளிப்பதாக யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா குற்றம்சாட்டியுள்ளார்.
யாழ்ப்பாண ஊடக மையத்தில் நேற்று (06.03.2024) நடத்திய ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “எங்களுடைய கடல் வளமும் வாழ்வாதாரமும் திட்டமிட்டு இலங்கை இந்திய அரசால் அழிக்கப்படுகின்றது. அதற்கு தடை செய்யப்பட்ட இழுவைமடி தொழில்களே காரணம்.
அந்தவகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் வட மாகாண கடற்றொழிலாளர்கள் இணைந்து மனு ஒன்றை கையளித்திருக்கிறோம். ஆனால், எமது போராடடங்களிற்கு அரசாங்கங்கள் உரிய தீர்வை தருவதாக எமக்கு தெரியவில்லை.
இந்நிலையில், நாங்கள் ஒரு மாத கால அவகாசத்திற்குள்ளே இரு நாட்டு அரசாங்கங்களும் கடற்படைகளும் இணைந்து இந்திய கடற்றொழிலாளர்களை இலங்கை கடற்படைக்குள் அத்துமீறி நுழையவிடாது கூட்டு ரோந்து நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளோம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri