கடலுக்கு சென்ற மீனவர்கள் இருவரை காணவில்லை: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
வல்வெட்டித்துறை பகுதியிலிருந்து கடற்றொழிலுக்குச் சென்ற மீனவர்கள் இருவரைக் காணவில்லை என வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறையில் இருந்து நேற்றைய தினம் காலை கடற்றொழிலுக்காக ஒரு படகில் இரு மீனவர்கள் சென்றுள்ளனர்.
ஆனால் இவர்கள் நேற்று மாலை வரை கரை திரும்பவில்லை என்று கூறப்படுகின்றது.
சுந்தரலிங்கம் கெங்காரூபன் என்ற 37 வயதுடையவரும் தவராசா சுதர்சன் என்ற 41வயதுடையவருமே காணாமல் போயுள்ளனர்.
இவர்கள் இருவரையும் தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.