மன்னாரில் வெடிபொருளுடன் கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல்
மன்னார் - தாழ்வுபாடு கடற்கரை பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு என தமது உடமையில் 'டைனமோட்' வெடிபொருளை வைத்திருந்த சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இரு கடற்றொழிலாளர்களையும் விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் இன்று வியாழன் (19) உத்தரவிட்டுள்ளது.
மன்னார்- தாழ்வுபாடு பகுதியில் இன்று வியாழன் (19) அதிகாலை கடற்படையினர் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது மீன்பிடி நடவடிக்கைக்கு என தமது உடமையில் டைனமோட் வெடிபொருளை வைத்திருந்த இரு கடற்றொழிலாளர்fளை ஓலைத்தொடுவாய் கடற்படையினர் கைது செய்தனர்.
வெடிபொருட்கள் அரச இரசாயன பகுப்பாய்வு
அவர்களிடம் மூன்று தொகுதி டைனமோட் வெடிபொருள் மீட்கப்பட்ட நிலையில், மேலதிக விசாரணைகளின் பின்னர் இரு சந்தேகநபர்களையும் மன்னார் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரியிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைத்தனர்.
இதனை தொடர்ந்து மேலதிக விசாரணையின் பின்னர் இன்று வியாழன் மதியம் குறித்த இரு சந்தேகநபர்களை மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அதே நேரம் கைப்பற்றப்பட்ட 'டைனமோட்' வெடிபொருட்கள் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
உயில் கிடைத்தவுடன் மீண்டும் வீட்டிற்குள் வந்த அய்யனார் துணை குடும்பம்.. அடுத்து நடக்கப்போகும் விஷயம் இதுதான் Cineulagam