மன்னாரில் வெடிபொருளுடன் கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல்
மன்னார் - தாழ்வுபாடு கடற்கரை பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு என தமது உடமையில் 'டைனமோட்' வெடிபொருளை வைத்திருந்த சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இரு கடற்றொழிலாளர்களையும் விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் இன்று வியாழன் (19) உத்தரவிட்டுள்ளது.
மன்னார்- தாழ்வுபாடு பகுதியில் இன்று வியாழன் (19) அதிகாலை கடற்படையினர் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது மீன்பிடி நடவடிக்கைக்கு என தமது உடமையில் டைனமோட் வெடிபொருளை வைத்திருந்த இரு கடற்றொழிலாளர்fளை ஓலைத்தொடுவாய் கடற்படையினர் கைது செய்தனர்.
வெடிபொருட்கள் அரச இரசாயன பகுப்பாய்வு
அவர்களிடம் மூன்று தொகுதி டைனமோட் வெடிபொருள் மீட்கப்பட்ட நிலையில், மேலதிக விசாரணைகளின் பின்னர் இரு சந்தேகநபர்களையும் மன்னார் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரியிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைத்தனர்.
இதனை தொடர்ந்து மேலதிக விசாரணையின் பின்னர் இன்று வியாழன் மதியம் குறித்த இரு சந்தேகநபர்களை மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அதே நேரம் கைப்பற்றப்பட்ட 'டைனமோட்' வெடிபொருட்கள் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 7 மணி நேரம் முன்
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri