போதைப் பொருள் கடத்தல்காரர்கள் இருவர் கைது
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருவர் கொழும்பின் தெஹிவளையில் கைது செய்யப்பட்டுள்ளனர். விசேட அதிரடிப்படையினர் இவர்களை கைது செய்துள்ளனர்.
இவர்களில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் கடும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள “தத சுதா” என்பவரும் அடங்குகிறார்.
பேலியகொடையை சேர்ந்த “தத சுதா” வட்ஸ்எப் ஊடாக துபாயில் உள்ள ஒருவருடன் இணைந்து போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தத சுதாவிடம் இருந்து 5 மில்லியன் ரூபா பெறுமதிக்கொண்ட பணப்பரிமாற்றத்துக்கான வங்கிப்புத்தகம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
14 கிராம் ஹெரோயின் மற்றும் மூன்று லட்சத்து 7ஆயிரத்து 740 ரூபாவும்
கைப்பற்றப்பட்டுள்ளது.