கோவிட் மரணங்களுக்கு பிரதான காரணமான இரண்டு நோய்கள்
கோவிட் மரணங்களுக்கு பிரதான காரணம் நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகிய நோய்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கோவிட் வைரஸ் தொற்றிய நிலையில் மரணிக்கும் நபர்களில் 80 வீதமானவர்கள் இந்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என சுகாதார அமைச்சின் கோவிட்-19 தொடர்பான இணைப்பதிகாரி மருத்துவ தொழிற்நுட்பட சேவையின் பணிப்பாளர் மருத்துவர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.
வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவிட் நோயாளிகள் முற்றாக குணமடைந்துள்ளனர்.
அதேவேளை ஓட்டமாவடி தேசிய கோவிட் மயானத்தில் இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அன்வர் ஹம்தானி குறிப்பிட்டுள்ளார்.