ஆறு துப்பாக்கிகளுடன் இருவர் கைது
ஆறு துப்பாக்கிகளுடன் இரண்டு சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அநுராதபுரம், கிரானேகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோரளயாகம மற்றும் உல்பத்தயாய ஆகிய பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட இரண்டு சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின்போது மேற்படி இருவரும் கிரானேகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் கைது
கிரானேகம பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து ஒரு வெளிநாட்டுத் துப்பாக்கியும், ஐந்து உள்நாட்டுத் துப்பாக்கிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்கள் 49 மற்றும் 51 வயதுடைய தேவஹுவ மற்றும் தம்புளுஹல்மில்லவெவ ஆகிய பகுதிகளை வசிப்பிடமாகக் கொண்டவர்கள் ஆவர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கிரானேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் இருவரும் கெக்கிராவ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri