கொழும்பில் துப்பாக்கிகளுடன் இருவர் கைது!
இருவேறு பிரதேசங்களில் இருவர் துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று(06) தெரிவித்துள்ளது.
கொழும்பு, பேலியகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வெளிநாட்டு துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நவகமுவ, ரணால பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இரகசிய தகவல்

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் தலைமையகத்துக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் அவரது வீட்டை சோதனை செய்தபோது வெளிநாட்டு துப்பாக்கி, தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது நடவடிக்கை

இதேவேளை, கொழும்பு அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலட்டுவாவ பிரதேசத்தில் உள்நாட்டு துப்பாக்கி ஒன்றுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தும்மோதர பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| இலங்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் - வெளிநாடுகளில் இயங்கும் கும்பல் |
ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம் News Lankasri
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri