கொழும்பில் துப்பாக்கிகளுடன் இருவர் கைது!
இருவேறு பிரதேசங்களில் இருவர் துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று(06) தெரிவித்துள்ளது.
கொழும்பு, பேலியகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வெளிநாட்டு துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நவகமுவ, ரணால பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இரகசிய தகவல்

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் தலைமையகத்துக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் அவரது வீட்டை சோதனை செய்தபோது வெளிநாட்டு துப்பாக்கி, தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது நடவடிக்கை

இதேவேளை, கொழும்பு அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலட்டுவாவ பிரதேசத்தில் உள்நாட்டு துப்பாக்கி ஒன்றுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தும்மோதர பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| இலங்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் - வெளிநாடுகளில் இயங்கும் கும்பல் |
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 10 மணி நேரம் முன்
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri