யாழில் வெவ்வேறு குற்றச்சாட்டுகளில் இருவர் கைது (photo)
யாழ். வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சீலாப்புலம் பகுதியில் வெவ்வேறு குற்றச்சாட்டின் கீழ் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை நேற்று (10.03.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ். சீலாப்புலம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஆண் ஒருவர் 4 லீட்டர் 500 மில்லி லீட்டர் கசிப்பு மற்றும் வாள் ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது நடவடிக்கை
இதேவேளை அதே பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஆண் ஒருவர் 3 லீட்டர் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் சான்று பொருட்களுடன் பாரப்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் தேசியப் பேரவை: பத்தாண்டு காலத் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வது 19 மணி நேரம் முன்

இந்த ராசியினர் விளையாட்டு துறையில் சாதிக்கவே பிறப்பெடுத்தவர்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri
