மட்டக்களப்பில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது
ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இருவரை மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளதாக குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.பண்டார தெரிவித்துள்ளார்.
நேற்று மட்டக்களப்பு புகையிரத நிலைய வீதியில் வைத்து முச்சக்கர வண்டியைச் சோதனையிட்டபோது அதிலிருந்து 5050 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவருடன் தொடர்புடைய மற்றொருவர் மட்டக்களப்பு நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 9100 ரூபாய் பணம், 4 கையடக்க தொலைபேசிகள், ஒரு முச்சக்கர வண்டி என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன. மோப்ப நாயின் உதவியுடனேயே மேற்படி முச்சக்கர வண்டி சுற்றி வளைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவர்கள் கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் மட்டக்களப்பு நீதவான்
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.