மட்டக்களப்பில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது
மட்டக்களப்பு- காத்தான்குடி பிரதேசத்தில் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களை நேற்று (19.03.2024) கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கடந்த ஒருவாரத்தில் 5 போதை பொருள் வியாபாரிகளை கைது செய்து நீதிமன்ற அனுமதியை பெற்று 3 நாட்கள் பொலிஸ் தடுப்பில் வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் காத்தான்குடி பொலிஸார் கூறியுள்ளனர்.
நீதிமன்றில் முன்னிலைப்டுத்த நடவடிக்கை
யுக்தி நடவடிக்கையின் கீழ் காத்தான்குடி பொலிஸார் போதை பொருள் வியாபாரிகளை கைது செய்துவருகின்ற நிலையில் கடந்த ஒருவாரத்தில் 5 வியாபாரிகளை 400 மில்லிகிராம் தொடக்கம் 3 கிராம் வரையிலான ஐஸ் போதை பொருளுடன் கைது செய்துள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்ட 5 பேரும் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயது தொடக்கம் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் விசாரணையின் பின்னர் இவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சண்டே ஸ்பெஷல்: இந்த வாரம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் எது தெரியுமா?.. வெளிவந்த புரொமோ Cineulagam

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
