வாழைச்சேனையில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் கைது!
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிண்ணியடி பிரதேசத்தில் உள்ள ஆற்றின் நடுவில் பல வருடங்களாக நடைபெற்று வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று கிழக்கு மாகாண பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று(19.02.2026) இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபர்கள் கைது
இதன்போது, கசிப்பு தயாரிக்க பயன்படுத்தப்படும் கோடா 7 இலட்சத்து 58 ஆயிரம் மில்லிலீட்டர் கோடா மற்றும் 30 ஆயிரம் மில்லிலீட்டர் வடி சாராயமும் மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை நாளை(20.02.2026) வாழைச்சேனை நீதிமன்றில் முற்படுத்த உள்ளதாக கிழக்குமாகாண குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் தெ.மேனன் தெரிவித்துள்ளார்.


சரவணன், அஞ்சலியை ஒரே இடத்தில் பார்த்து அதிர்ச்சியடையும் மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ வீடியோ Cineulagam
மீனாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த முத்து.. ரோகிணியுடன் மீண்டும் இணைந்துவிட்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam