திருகோணமலை வீதியில் கொம்பு மான் ஒன்று சடலமாக மீட்பு!
திருகோணமலை- கந்தசுவாமி வீதியில் கொம்பு மான் ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று(19.02.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகரப்பகுதிக்குள் நடமாடும் வனவிலங்குகளில் ஒன்றான மான், உயிரிழந்த நிலையில் வீதியோரத்தில் கிடப்பதைக் கண்ட பொதுமக்கள் இது குறித்து உரிய அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
சமூக ஆர்வலர்களின் கோரிக்கை
குறித்த மான், வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

திருகோணமலை நகர் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் அண்மைக்காலமாக மான்களின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், அவற்றின் பாதுகாப்பு அச்சம் சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது.
தகவலறிந்த வனவிலங்கு பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். உயிரிழந்த மானின் உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீதிகளில் வேகமாகச் செல்லும் வாகன சாரதிகள், இவ்வாறான வனவிலங்குகள் நடமாடும் பகுதிகளில் அவதானத்துடன் செயற்படுமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உயில் கிடைத்தவுடன் மீண்டும் வீட்டிற்குள் வந்த அய்யனார் துணை குடும்பம்.. அடுத்து நடக்கப்போகும் விஷயம் இதுதான் Cineulagam
மீனாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த முத்து.. ரோகிணியுடன் மீண்டும் இணைந்துவிட்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam