களு கங்கையில் மனித கழிவுகளை கொட்டிய இருவர் கைது
களு கங்கையில் மனிதக் கழிவுகளை கொட்டிய இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹொரணை - அங்குருவாதொட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
"அத்தியாவசிய சேவைகள்" என்ற பெயர்ப்பலகையுடன் பௌசர் வண்டி சாரதியொருவரும், அதன் உதவியாளருமே இவ்வாறு மனிதக் கழிவுகளை ஆற்றில் கொட்டிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அங்குருவத்தோட்ட, மாபுகொட, உடுகம்மன பிரதேசத்தின் காட்டுப்பகுதியில் பவுசரை நிறுத்தி இருவர் களுகங்கையில் மனிதக் கழிவுகளைக் கொட்டுவதற்குத் தயாராகி வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முறையாக பதிவு செய்யப்படவில்லை
சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, இவர்கள் களுத்துறை பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிவதாகவும், அப்பகுதியிலுள்ள பல்வேறு நிறுவனங்களில் இருந்து கழிவுகளை அகற்றுவதற்காகக் கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது, குறித்த நிறுவனம் அரசாங்கத்தில் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் ஹொரணை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
முத்து தலையில் இடியை இறக்கிய சிந்தாமணி.. அதிர்ச்சியில் அண்ணாமலை குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் நடக்கப்போவது இதுதான் Cineulagam
படப்பிடிப்பில் ஏற்பட்ட மூச்சுத்திணறல்.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்ன மருமகள் சீரியல் நடிகர் நவீன் Cineulagam
ரிஷப ராசியில் உதயமாகும் புதன் - சுக்கிரன் : இன்று முதல் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan