கடுக்காமுனையில் மாவீரர் தினத்தை அனுஷ்டித்த இருவர் கைது
விடுதலைப் புலிகளின் மாவீரர் தினத்தை அனுஷ்டித்த இரண்டு பேரை தாம் கைது செய்துள்ளதாக அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சந்தேக நபர்கள் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை கடுக்காமுனை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடுக்காய்முனை பிள்ளையார் கோயிலின் பூசகரும் இன்னுமொரு நபருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவின் கொக்கட்டிச்சோலை - அம்பலாந்துறை வீதியில் கடுக்காமுனை பிரதேசத்தில் நடத்திய தேடுதலில் கைவிடப்பட்ட இடம் ஒன்றில் விளக்கேற்றி, பட்டாசு கொளுத்தி மாவீரர் தினத்தை அனுஷ்டித்த இந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.