மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் திருட்டில் ஈடுபட்ட இரு இராணுவ உறுப்பினர்கள் கைது
மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் இருந்து கணனிகள் மற்றும் மின் விளக்குகளை திருடிச் சென்ற இரண்டு இராணுவ உறுப்பினர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த கைதானது இன்று(10.09.2023) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பல்கலைக்கழகத்தில் கடமையில் ஈடுபட்டுவந்த இரு இராணுவத்தினர் அங்கிருந்த 5 கணனிகள் மற்றும் 80 மின் விளக்குகளை திருடியுள்ளனர்.
பொலிஸ் சோதனை
அவற்றை பொதி செய்து பயணித்த நிலையில் வெலிகந்தை வீதி சோதனைச் சாவடியில் பொலிஸார் அவர்கள் பயணித்த முச்சக்கரவண்டியை நிறுத்தி சோதனையிட்டுள்ளனர்.
இந்நிலையில் திருடி செல்லப்பட்ட பொருட்களுடன் இரு இராணுவ உறுப்பினர்களையும், முச்சக்கரவண்டி சாரதியையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்ட இருவரும் வெள்ளவாய, குருநாகலை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை இராணுவம் பெறுப்பேற்ற பின்னர் பல இலட்சம் ரூபா பெறுமதியான இலத்திரணியல் பொருட்கள் திருட்டுப் போயுள்ளதாக பல்கலைகழக நிர்வாகம் பொலிஸ் நிலையத்தில் 5 முறைப்பாடுகள் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan