ஒரு நாள் முன்பே டெல்லியில் விஜய்..புறப்பட்ட தனி விமானம்!
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான விசாரணைக்கு முன்னிலையாவதற்காக தவெக தலைவர் விஜய் இன்று மாலை தனி விமானம் மூலம் டெல்லி சென்றுள்ளார்.
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் திகதி தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
சிபிஐ விசாரணை
இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
சிபிஐ விசாரணைக்கு ஆஜராவதற்காக டெல்லி புறப்பட்டார் விஜய்..! விமான நிலையத்தின் உள்ளே நுழையும் முன் விஜய் செய்த செயல்.. தொண்டர்கள் உற்சாகம்..#Chennai | #TVK | #TVKvijay | #CBI | #KarurStampede pic.twitter.com/oe7BJKA657
— Polimer News (@polimernews) January 18, 2026
இந்த விசாரணைக்காக தவெக நிர்வாகிகள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் ஆகியோர் ஏற்கனவே டெல்லியில் சிபிஐ அலுவலகத்தில் முன்னிலையாகினர்.
அதேவேளை, இதற்கு முன்பாக அவர் விசாரணைக்காக முன்னிலையாகிய போது அரை மணிநேரம் விஜய் தாமதமாக சென்றதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்று அவர் ஒருநாள் முன்னதாகவே டெல்லி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
நிலாவுக்கு விவாகரத்து தரும் சோழன்.. அதிர்ச்சியில் நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது Cineulagam
கிரீன்லாந்து விவகாரம்: 10% கூடுதல் வரி..! டிரம்பின் மிரட்டலுக்கு ஸ்டார்மர் கடும் எதிர்ப்பு News Lankasri