துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கி 178 மணி நேர போராட்டம்! உயிருடன் மீட்கப்பட்ட 6 வயது சிறுமி
துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டு 178 மணி நேரத்திற்கு பின்னர் கட்டிட இடிபாடுகளில் இருந்து 6 வயது சிறுமி உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
35,000 பேர் உயிரிழப்பு துருக்கி மற்றும் சிரியா ஆகிய இருநாடுகளையும் கடந்த திங்கட்கிழமை அதிகாலை 7.8 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது.
இதில் இதுவரை 35,000 பேர் உயிரிழந்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பல்லாயிரக்கணக்கானோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை,துருக்கியில் கட்டட இடிபாடுகளுக்கிடையே சிக்கியிருந்த 6 வயது சிறுமியை இந்தியாவில் இருந்து கொண்டுசெல்லப்பட்ட மோப்ப நாய்கள் காப்பாற்றியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகளுக்காக சென்றுள்ள இந்திய மீட்புக்குழுவினருடன், தேசிய பேரிடர் மீட்புப்படையை சேர்ந்த ஜூலி மற்றும் ரோமியோ மோப்ப நாய்களும் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இரு மோப்ப நாய்களும் நூர்தாகியில் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருந்த 6 வயது சிறுமியை காப்பாற்றியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
பீகார் சென்ற அய்யனார் துணை குடும்பத்திற்கு ஷாக் கொடுத்த சந்தா அப்பா... புதிய பரபரப்பான புரொமோ Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam