துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கி 178 மணி நேர போராட்டம்! உயிருடன் மீட்கப்பட்ட 6 வயது சிறுமி
துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டு 178 மணி நேரத்திற்கு பின்னர் கட்டிட இடிபாடுகளில் இருந்து 6 வயது சிறுமி உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
35,000 பேர் உயிரிழப்பு துருக்கி மற்றும் சிரியா ஆகிய இருநாடுகளையும் கடந்த திங்கட்கிழமை அதிகாலை 7.8 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது.
இதில் இதுவரை 35,000 பேர் உயிரிழந்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பல்லாயிரக்கணக்கானோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை,துருக்கியில் கட்டட இடிபாடுகளுக்கிடையே சிக்கியிருந்த 6 வயது சிறுமியை இந்தியாவில் இருந்து கொண்டுசெல்லப்பட்ட மோப்ப நாய்கள் காப்பாற்றியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகளுக்காக சென்றுள்ள இந்திய மீட்புக்குழுவினருடன், தேசிய பேரிடர் மீட்புப்படையை சேர்ந்த ஜூலி மற்றும் ரோமியோ மோப்ப நாய்களும் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இரு மோப்ப நாய்களும் நூர்தாகியில் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருந்த 6 வயது சிறுமியை காப்பாற்றியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணி நிலம் வேண்டும் பராசக்தி 3 நாட்கள் முன்

Optical illusion: உங்கள் கண்களுக்கு உயிர் உள்ளது எனில் இதில் இருக்கும் நேரான “28” எங்கே உள்ளது? Manithan

சமீபத்தில் திருமணம் செய்த தொகுப்பாளினி பிரியங்காவிற்கு இப்படியொரு சோகமா?... அவரே வெளியிட்ட போட்டோ Cineulagam

மணிக்கு 12,300 கிமீக்கு மேல் வேகம்.., ரஷ்யாவின் RS-26 Oreshnik ஹைப்பர்சோனிக் ஏவுகணையின் விவரம் News Lankasri
