உலக நாடுகளை உலுக்கிய துருக்கி நிலநடுக்கம்! 3 நாட்களுக்கு முன்பே துல்லியமாக கணித்த ஆராய்ச்சியாளர்
துருக்கி, சிரியாவில் மூன்று நாட்களுக்கு முன்பே நிலநடுக்கம் ஏற்படும் என்று ஆராய்ச்சியாளர் ஒருவர் கணித்துள்ளமை தற்பொழுது பேசுபொருளாக மாறியுள்ளது.
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2,500 க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ள சம்பவம் உலகத்தையே உலுக்கியுள்ளது.
முதல் நிலநடுக்கம் 7.8 என்ற ரிக்டர் அளவில் பதிவான நிலையில், 2 வது நிலநடுக்க 7.5 என்ற ரிக்டர் அளவிலும், 3 வது நிலநடுக்கம் 6 என்ற ரிக்டர் அளவிலும் பதிவாகின.
இந்த சுழலில், நெதர்லாந்தை சேர்ந்த ஃபிரான்க் ஹூகர்பீட்ஸ் என்ற ஆராய்ச்சியாளர் கடந்த பெப்ரவரி 3 ஆம் திகதி இப்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும் என்பதை துல்லியமாக கணித்திருக்கின்றார்.
SSGEOS என்ற புவியியல் ஆய்வு நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக உள்ள இவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், "கூடிய சீக்கிரமோ அல்லது தாமதமாகவோ மத்திய - தெற்கு துருக்கி, ஜோர்டான், சிரியா, லெபனான் பகுதியில் 7.5 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகும்." என்று பதிவிட்டுள்ளார்.
This guy has been predicting earthquakes based on lunar & planetary geometry models & though many of his predictions have come up empty, a few, in particular this recent one in the Turkish/Syrian border was eerily accurate. Still looking at prediction accuracy; looks quite low. https://t.co/EbFCvmMNGA
— Dr Hyelander 🇦🇲 🌋 (@Helioprogenus) February 6, 2023