துருக்கியின் கிழக்கு பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் பதிவு
துருக்கியின் கிழக்கு பகுதியில் மீண்டும் நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது.
5.4 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை அங்கு மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்புக்கள் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
துருக்கியில் மீண்டுமொரு நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
துருக்கியில் நேற்றைய தினம் 24 மணிநேரத்திற்கு மூன்று நிலநடுக்கங்கள் பதிவாகியிருந்தன.
இந்த நிலையில் தற்போது வரையில் 4000 இற்கும் மேற்பட்ட உயிரிப்புக்கள் பதிவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மீண்டுமொரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
இவ்வாறானதொரு சூழலில் இப்போது மீண்டும் ஒரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமே இப்போது பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



சரிகமப Li’l Champs சீசன் 4ல் வெற்றிப்பெற்றவர்களுக்கு கிடைத்த பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? Cineulagam
