இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை - செய்திகளின் தொகுப்பு
கிழக்கு திமோர் கடற்கரையில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, இந்தியப் பெருங்கடல் பகுதிக்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நேற்று கிழக்கு திமோருக்கும் இந்தோனேசியாவிற்கும் இடையே பிளவுபட்டுள்ள திமோர் தீவின் கிழக்கு முனையிலிருந்து 51.4 கிமீ (32 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சுனாமியை உருவாகும் திறன்கொண்ட நிலநடுக்கம்
இந்த நிலநடுக்கம் இந்தியப் பெருங்கடல் பகுதியில் சுனாமியை உருவாக்கும் திறன் கொண்டதாக இருக்கலாம் என இந்தியப் பெருங்கடல் சுனாமி எச்சரிக்கை மற்றும் தணிப்பு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மாலைநேர செய்திகளின் தொகுப்பு,