இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் ட்ரம்ப் பேசும் போது நடந்த செயலால் பரபரப்பு
இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப் உரையாற்றும் போது திடீரென இரண்டு உறுப்பினர்கள் டிரம்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல்- காசா (ஹமாஸ்) இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், அமைதி உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமெரிக்க டொனால்ட் ஜனாதிபதி ட்ரம்ப் எகிப்து செல்ல உள்ளார்.
எதிரான கோஷம்
அதற்கு முன்னதாக இன்று(13) இஸ்ரேல் சென்றார். அவருக்கு இஸ்ரேலில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் உலகிற்கு “அதிக ட்ரம்ப்கள் தேவை” என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று புகழாரம் சூட்டியுள்ளனர்.
இந்தநிலையில், திடீரென இரண்டு உறுப்பினர்கள் ட்ரம்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டுள்ளனர். இதனால் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
அவர்கள் இருவரும் அவை பாதுகாவலர்களால் வெளியேற்றப்பட்டபின்னர் ட்ரம்ப் தொடர்ந்து உரையாற்றியுள்ளார்.
ஐமென் ஓடே மற்றும் ஓஃபர் காசிஃப் அகிய இரண்டு உறுப்பினர்கள்தான் கோஷம் எழுப்பினர். அதில் ஒருவர் இனப்படுகொலை என எழுதப்பட்டிருந்த பதாகையை தூக்கிபிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



