காசா போருக்கு முற்றுப் புள்ளியிட்ட ட்ரம்பின் கையெழுத்து
காசா அமைதி திட்ட வரலாற்று ஒப்பந்தத்தில் முதல் நபராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக் (Sharm El-Sheikh) நகரில் நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தில் இந்த வரலாற்று நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, காசாவுக்கான சர்வதேச அமைதி ஒப்பந்தம் முறைப்படி கையெழுத்திடப்பட்டுள்ளது.
மூன்றாம் உலக போர்
இந்த வரலாற்று ஒப்பந்தத்தில் முதல் நபராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.
அதன் பின்னர், இந்த ஒப்பந்தம் கிட்டத்தட்ட 3000 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது, இதை நம்ப முடிகிறதா? இந்த ஒப்பந்தம் நிச்சயமாக நிலைத்து இருக்கும் என்று ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும், ட்ரம்பை தொடர்ந்து துருக்கி ஜனாதிபதி எர்டோகன், எகிப்து தலைவர் அப்துல் ஃபத்தா அல் சிசி ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
இதற்கிடையில், அமைதி ஒப்பந்தம் குறித்து ஊடகங்களிடம் பேசிய ட்ரம்ப், இது உலகிற்கே நம்ப முடியாத நாள் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்த ஒப்பந்தம் வெற்றிகரமாக செயல்பட்டால் மத்திய கிழக்கில் ஏற்பட வாய்ப்பு இருக்கும் மூன்றாம் உலக போர் தடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





TRP-வில் புதிய உச்சத்தை தொட்ட எதிர்நீச்சல் சீரியல்.. இதுவரை இவ்வளவு ரேட்டிங் வந்ததே இல்லை Cineulagam
