மீண்டும் இரண்டு வார காலக்கெடு! போர் நிறுத்தம் - ட்ரம்ப் சற்றுமுன்னர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
பாகிஸ்தான் தலைவர்களுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு, ஹோர்முஸ் நீரிணை வழியாகப் போக்குவரத்தை அனுமதிக்க ஈரான் ஒப்புக்கொண்டால், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்படும் என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீதான குண்டுவீச்சையும் தாக்குதலையும் இரண்டு வார காலத்திற்கு நிறுத்தி வைக்க நான் ஒப்புக்கொள்கிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் சில மணிநேரங்களே..! உலகம் உற்று நோக்கிக்கொண்டிருக்கும் ட்ரம்பின் தாக்குதல் நேரம் - பெரும் பதற்றம்
இரண்டு வார காலம்
அவர் ட்ருத் சோசியலில் வெளியிட்ட அறிவிப்பில், பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீஃப் மற்றும் ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோருடனான உரையாடல்களின் அடிப்படையில், இன்று இரவு ஈரானுக்கு அனுப்பப்படும் அழிவுகரமான சக்தியை நிறுத்தி வைக்குமாறு அவர்கள் என்னிடம் கேட்டுக்கொண்டனர்.
மேலும், ஈரான் இஸ்லாமியக் குடியரசு, ஹோர்முஸ் நீரிணை முழுமையாகவும், உடனடியாகவும், பாதுகாப்பாகவும் திறக்க ஒப்புக்கொண்டால், ஈரான் மீதான குண்டுவீச்சையும் தாக்குதலையும் இரண்டு வார காலத்திற்கு நிறுத்தி வைக்க நான் ஒப்புக்கொள்கிறேன்.
இது ஒரு இருதரப்பு போர்நிறுத்தமாக இருக்கும்! இவ்வாறு செய்வதற்கான காரணம், நாம் ஏற்கனவே அனைத்து இராணுவ இலக்குகளையும் அடைந்து, அவற்றையும் தாண்டிவிட்டோம். மேலும், ஈரானுடனான நீண்டகால அமைதி மற்றும் மத்திய கிழக்கில் அமைதி தொடர்பான ஒரு திட்டவட்டமான உடன்படிக்கையை எட்டுவதில் வெகுதூரம் முன்னேறிவிட்டோம்.
ஈரானுக்கான காலக்கெடுவை நீட்டிக்குமாறு பாகிஸ்தான் கோரிக்கை! விரைவில் நல்ல செய்தி - தீவிர பேச்சுவார்த்தையில் ட்ரம்ப்
10 அம்ச முன்மொழிவு
ஈரானிடமிருந்து 10 அம்ச முன்மொழிவைப் பெற்றுள்ளோம், மேலும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அது ஒரு நடைமுறைக்கு உகந்த அடிப்படை என்று நம்புகிறோம். கடந்த கால கருத்து வேறுபாடுகளின் பல்வேறு அம்சங்கள் அனைத்தும் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் கிட்டத்தட்ட ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளன, ஆனால் இந்த இரண்டு வார கால அவகாசம், உடன்படிக்கையை இறுதி செய்து நிறைவு செய்வதற்கு வழிவகுக்கும்.

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சார்பாக, ஜனாதிபதியாகவும், மத்திய கிழக்கு நாடுகளின் பிரதிநிதியாகவும், இந்த நீண்டகாலப் பிரச்சினை ஒரு தீர்வின் விளிம்பை எட்டியிருப்பது எனக்குப் பெருமையளிக்கிறது. இந்த விஷயத்தில் நீங்கள் காட்டிய கவனத்திற்கு நன்றி! என குறி்பிட்டுள்ளார்.
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கான அனைத்து வழிகளையும் மூடியதாக அறிவித்த ஈரான்- பதற்றத்தில் உலகம் News Lankasri
வீட்டைவிட்டு வெளியேறுவது குறித்து நிலா சொன்ன பதில், சேரன், சோழன் செய்தது என்ன?... அய்யனார் துணை சீரியல் Cineulagam