ட்ரம்பின் அறிவிப்பால் மகிழ்ச்சியில் அமெரிக்க மக்கள்..
ட்ரப்பின் புதிய நிர்வாக உத்தரவு மூலம் தேயிலை, பழச்சாறு, கோகோ, மசாலா பொருட்கள், வாழைப் பழங்கள், ஆரஞ்சு, தக்காளி மற்றும் சில உரங்கள் உள்ளிட்ட பொருட்களின் மீதான வரிகள் நீக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கடந்த ஏப்ரல் மாதம் பல்வேறு நாடுகள் மீது கூடுதல் வரிகளை விதித்தார். அண்டை நாடுகளான கனடா, மெக்சிகோ மற்றும் பிரேசில் உள்பட பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரிகள் விதிக்கப்பட்டன.
இறக்குமதி வரி
இறக்குமதி வரி உயர்ந்ததால் அமெரிக்காவில் பல்வேறு பொருட்களின் விலை அதிகரித்தது.

குறிப்பாக உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். இதையடுத்து சில உணவு பொருட்களுக்கான இறக்குமதி வரியை குறைக்க அமெரிக்க அரசு ஆலோசித்து வந்தது.
இந்தநிலையில் மாட்டிறைச்சி, காபி, பழங்கள் உள்ளிட்ட பல்வேறு உணவு பொருட்களின் மீதான வரிகளை நீக்குவதற்கான நிர்வாக உத்தரவில் ஜனாதிபதி ட்ரம்ப் கையெழுத்திட்டார்.
இந்த புதிய வரி விலக்கு வருகிற 20ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்க மக்கள்
இதுதொடர்பாக ட்ரம்ப் கூறும்போது," கோபி போன்ற சில உணவுகள் பொருட்கள் மீதான வரியை நாங்கள் குறைத்துள்ளோம்" என குறிப்பிட்டுள்ளார்.

உணவு பொருட்களின் விலை அதிகரித்து வருவதாக நுகர்வோர்கள் முறைபாடுகள் அளித்து வந்தனர். இது சமீபத்தில் நடந்த மேயர் மற்றும் உள்ளூர் தேர்தலில் எதிரொலித்தது. இந்த தேர்தல்களில் ட்ரம்பின் குடியரசு கட்சி தோல்வியை சந்தித்தது.
இதற்கு விலைவாசி உயர்வு பிரச்சினைதான் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் மாட்டிறைச்சி உள்ளிட்ட உணவு பொருட்களின் மீதான இறக்குமதி வரியை ரத்து செய்வதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவும் குணசேகரன் சதி தான்.. புது முடிவெடுத்த ஜனனி! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
எதிர்பார்க்காத போட்டியாளர் பிக் பாஸ் 9 வீட்டிலிருந்து வெளியேற்றம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam