போர் நிறுத்தத்தை தொடர்ந்து எண்ணெய் விலையில் ஏற்பட்ட உடனடி மாற்றம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிபந்தனைக்குட்பட்ட இரண்டு வார கால போர் நிறுத்தத்தை அறிவித்ததை அடுத்து, கடந்த ஒரு மணி நேரத்தில் எண்ணெய் விலைகள் தொடர்ந்து சரிந்து வருகின்றதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உலகளாவிய தர அளவுகோலான பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரலுக்கு சுமார் 13.6% சரிந்து, 94.50 டொலராக (70.58 பவுண்ட்) குறைந்தது. அமெரிக்காவில் வர்த்தகம் செய்யப்படும் கச்சா எண்ணெய் விலை சுமார் 14.3% சரிந்து, 96.80 டொலராகக் குறைந்துள்ளது.
எண்ணெய் விலைகள்
செவ்வாயன்று இரு அளவுகோல்களும் ஒரு பீப்பாய் 100 டொலருக்கும் கணிசமாக அதிகமாக வர்த்தகமாகின.
நிபந்தனைக்குட்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் வர்த்தகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும், இதுவே எண்ணெய் விலைகளில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சிக்குக் காரணம் என்றும் ஜப்பானின் எரிசக்தி பொருளாதார நிறுவனத்தைச் சேர்ந்த இச்சிரோ குடானி குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், அப்பகுதியில் ஏற்பட்ட சேதத்தின் காரணமாக, போருக்கு முந்தைய காலகட்டமான ஒரு பீப்பாய் சுமார் 70 டொலர் என்ற நிலைக்கு விலைகள் திரும்புவதற்கு இன்னும் வாய்ப்பில்லை என்று அவர் கூறினார்.
ஆசியாவிலும் ஆரம்ப வர்த்தகத்தில் சந்தைகள் ஏற்றம் கண்டன. ஜப்பானின் நிக்கெய் 225 குறியீடு 4% உயர்ந்தது, அதே நேரத்தில் அவுஸ்திரேலியாவின் ஏஎஸ்எக்ஸ் 200 குறியீடு கிட்டத்தட்ட 3% அதிகரித்தது.