மகிந்தவின் அவதாரத்தில் ட்ரம்ப் - ஆயர் இராயப்புவிற்கு நடந்தது போப் லியோவிற்கும்
ஈரான் மீதான அமெரிக்காவின் போர் குறித்து கருத்து தெரிவித்த கத்தோலிக்க திருச்சபைகளின் தலைவரான போப் 14ஆம் லியோவை கடுமையாக சாடிய ட்ரம்ப், தன்னை இயேசு போல் சித்தரித்து ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.
தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில் போப் 14ஆம் லியோ குறித்து விமர்சனம் செய்து பதிவிட்ட அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், “போப் லியோ குற்ற விடயத்தில் பலவீனமானவர். வெளியுறவுக் கொள்கையில் படுமோசமானவர் என விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் குறித்த விடயங்கள் 2009ஆம் ஆண்டு யுத்தம் இடம்பெற்றபோது இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினுடைய மனநிலையும் டொனால்ட் ட்ரம்பினுடைய மனநிலையும் ஒன்றாக இருந்ததாக கூறப்படுகிறது.
குறிப்பாக மகிந்த ராஜபக்சவோடு அக்காலப்பகுதியில் தமிழ் ஆயர்கள் கடுமையான கருத்துக்களை கூறினார்கள். அதில் சில ஆயர்கள் குறிவைக்கப்பட்டார்கள். மிரப்பட்டார்கள்.
கிட்டத்தட்ட டொனால் ட்ரம்பிற்கு இணையாகத்தான் மகிந்த செயற்பட்டதாக கூறப்படுகிறது.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி....