திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தினால் நிரந்தர வீடுகள் வழங்கி வைப்பு
திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தினால் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களின் வீட்டுத் தேவையை பூர்த்தி செய்யும் நோக்குடன் நிரந்தர வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு பயனாளிகளின் பாவனைக்கு கையளிக்கப்பட்டன.
இந்நிகழ்வு நேற்று (06) மன்றத்தின் தலைவர் எம். ரீ. ஏம். பாரிஸ் தலைமையில் இடம்பெற்றது.
கடந்த யுத்தம் மற்றும் தற்போதைய பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டு மிக நீண்டகாலம் நிரந்தர வீடுகள் இன்றி கஸ்டப்படும் குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் அமைத்துக் கொடுக்கும் திட்டத்தின் கீழ் 25 வீடுகள் நிர்மாணிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
தொண்டு நிறுவனம்
பெல்ஜிய நாட்டு தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றின் நிதிப் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டு வரும் வாழ்வதற்கான இல்லறம் செயற்றிட்டத்தின் முதற்கட்டமாக ஆறு பயனாளிகளுக்கு வீடுகள் கையளிக்கப்பட்டன.
திருகோணமலை மாவட்டத்தில் விளாங்குளம், இலுப்பைக்குளம், சல்லி மற்றும் ஆத்திமோட்டை ஆகிய கிராமங்களில் உள்ள பயனாளிகளுக்கே குறித்த வீடுகள் வழங்கி வைக்கப்பட்டன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |