திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் நினைவு நாள் அனுஷ்டிப்பு!
திருகோணமலை கடற்கரையில் சுட்டுக் கொல்லப்பட்ட ஐந்து பல்கலைக்கழக மாணவர்களின் நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை மின்சார நிலைய வீதியில் அமைந்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட செயற்பாட்டாளர் ஸ்ரீ ஞானேஸ்வரனால் இந்நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது ஸ்ரீ ஞானேஸ்வரன் கருத்துத் தெரிவிக்கையில்,
நினைவேந்தலை கூட நடத்துவதற்கு பாதுகாப்பு படையினர், புலனாய்வுத்துறையினர் பல கேள்விகளை கேட்பதாகவும், நினைவேந்தலை கூட நட த்துவதற்கு உரிமையில்லையா? எனவும் அவர் இதன்போது கேள்வி எழுப்பினார்.
அத்துடன் சர்வதேச விசாரணையூடாக மட்டுமே ஐந்து மாணவர் படுகொலைக்கான நீதியைப் பெற்றுக்கொள்ளமுடியும்.