மணல் அகழும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு: திருகோணமலையில் போராட்டம்
திருகோணமலை- குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நிலாவெளி - இக்பால் நகர் தொடக்கம் தென்னைமரவாடி வரை கடற்கரை ஓரமாக மணல் அகழும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமங்களில் வசிக்கும் மூவின மக்களும் இணைந்து ஆர்ப்பட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு முன்னால் இன்று (17.09.2023) குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது தனியார் நிறுவனமொன்றிற்கு வழங்கப்பட்டுள்ள குறித்த மணல் அகழ்வு அனுமதியை உடனடியாக இரத்துச் செய்யுமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இயற்கை வள பாதிப்பு
குறித்த மணல் அகழ்வின் மூலம் இயற்கை வளம் பாதிப்பதோடு மட்டுமல்லாமல் மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு வருவதாகவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தனியார் நிறுவனத்திற்கு வழங்கிய அனுமதிக்கு முரணாக மணல் அகழப்படுவதால் கடற்கரையை அண்டி இருக்கின்ற கிராமங்கள் கடலுக்குள் உள்வாங்கப்படுகின்ற அபாயமும் நிலவுவதாக மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.
தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள இந்த அனுமதியின் மூலம் மக்களில் வாழ்வாதாரத்தை சுடண்டி தனியார் இலாபம் சம்பாதிப்பதாகவும் எதிர்கால சந்ததிக்கான இயற்கை வளம் இல்லாதொழிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்து அது தொடர்பான வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறும், கருத்துக்களை தெரிவித்தும் மக்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

















யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
