டித்வா புயல் தாக்கம் : திருகோணமலை மாவட்ட அனர்த்த விபரம் வெளியானது

Trincomalee Sri Lankan Peoples Weather
By H. A. Roshan Dec 02, 2025 08:48 AM GMT
Report

திருகோணமலை - மட்டக்களப்பு பாதை

திருகோணமலை - மட்டக்களப்பு பாதையின் இரால் குழி பகுதியில் முற்றிலுமாக சேதமடைந்த 500 - 800 மீட்டர் நீளத்தை புனரமைப்பதன் மூலம், திருகோணமலையிலிருந்து மூதூர், சேருவில மற்றும் வெருகல் வரையிலான விநியோகத்தை மீட்டெடுக்க முடியும் என பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார். 

குறித்த பகுதிக்கு இன்று (02)விஜயம் செய்து இது தொடர்பில் ஆராய்ந்த பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர, எப்படியும் மிகக் குறுகிய காலத்தில் இதைச் செய்வோம் என குறிப்பிட்டுள்ளார். 

கந்தளாய் - சேருவில வீதி

மகாவலி ஆறு நிரம்பி வழிவதால், கந்தளாய் சூரியபுர தொடக்கம் சேருவில வரையிலான பிரதான வீதி கடந்த நான்கு நாட்களாக மூடப்பட்டுள்ளது.

இதனால், அல்ல-சேருவில பொலிஸ் நிலையத்திற்கும் சூரியபுர பொலிஸ் நிலையத்திற்கும் இடையிலான முக்கியப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

வெள்ளப் பெருக்கு காரணமாக, கந்தளாய் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சூரியபுர, சமகிபுர மற்றும் சமனல பாலம் ஆகிய கிராமங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை: 139 குடும்பங்களைச் சேர்ந்த 445 பேர். இவர்கள் அனைவரும் சூரியபுர மகாவலிபுர வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த இடம்பெயர்வு மற்றும் வெள்ள நிலைமைகள் குறித்து கந்தளாய் பிரதேச செயலக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். வீதி மூடப்பட்டிருப்பதால், மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறும், பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

செய்தி - யூஷப் 

புதிய இணைப்பு

சீரற்ற காலநிலை மற்றும் டித்வா புயல் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 22883 குடும்பங்களை சேர்ந்த 74449 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

திருகோணமலை மாவட்டத்தின் 11 பிரதேச செயலக பிரிவை உள்ளடக்கிய 212 கிராம சேவகர் பிரிவுகளில் இருந்து இன்று (02) காலை 07.00 மணி வரையான தகவலின் அடிப்படையில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் 620 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட 17772 குடும்பங்களை சேர்ந்த 59071 நபர்கள் உறவினர்கள் மற்றும் சொந்த வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

75 பாதுகாப்பான தற்காலிக முகாம்களில் 6615 குடும்பங்களை சேர்ந்த 19260 பேர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

முதலாம் இணைப்பு

சீரற்ற காலநிலை மற்றும் டித்வா புயல் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 22594 குடும்பங்களை சேர்ந்த 73388 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

திருகோணமலை மாவட்டத்தின் 11 பிரதேச செயலக பிரிவை உள்ளடக்கிய 212 கிராம சேவகர் பிரிவுகளில் இருந்து 25.11.2025 _2025.12.01 நேற்று (01) மாலை 06.00 மணி வரையான தகவலின் அடிப்படையில் வெளியிட்ட அறிக்கையின் பிரகாரம் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் 620 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட 17612 குடும்பங்களை சேர்ந்த 58440 நபர்கள் உறவினர்கள் மற்றும் சொந்த வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.73 பாதுகாப்பான தற்காலிக முகாம்களில் 4836 குடும்பங்களை சேர்ந்த 14480 பேர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கண்டியில் தடைப்பட்டிருந்த நீர்விநியோகம் குறித்து வெளியான அறிவிப்பு

கண்டியில் தடைப்பட்டிருந்த நீர்விநியோகம் குறித்து வெளியான அறிவிப்பு

திருகோணமலை மாவட்ட அனர்த்த விபரம்

திருகோணமலை  - பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவில் 521 குடும்பங்களை சேர்ந்த 1849 நபர்களும், தம்பலகாமம் 450 குடும்பங்களை சேர்ந்த 1421 நபர்களும்,மொறவெவ 135 குடும்பங்களை சேர்ந்த 420 நபர்களும்,சேருவில 805 குடும்பங்களை சேர்ந்த 2287 நபர்களும், வெருகல் 1880 குடும்பங்களை சேர்ந்த 5607 நபர்களும்,மூதூர் 6941 குடும்பங்களை சேர்ந்த 22378 நபர்களும்,கிண்ணியா 5007 குடும்பங்களை சேர்ந்த 16446 நபர்களும்,கோமரங்கடவல 304 குடும்பங்களை சேர்ந்த 942 நபர்களும் , பதவிஸ்ரீபுர 533 குடும்பங்களை சேர்ந்த 1802 நபர்களும், குச்சவெளி 5732 குடும்பங்களை சேர்ந்த 19255 நபர்களும், கந்தளாய் 286 குடும்பங்களை சேர்ந்த 981 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டித்வா புயல் தாக்கம் : திருகோணமலை மாவட்ட அனர்த்த விபரம் வெளியானது | Trincomalee District Disaster Details

மாவிலாறு அனைக்கட்டு உடைப்பெடுத்ததன் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதுஇ

அத்துடன் மீட்பு நடவடிக்கைகளில் முப்படையினர்கள் களமிறக்கப்பட்டுள்ளதுடன் வான்வழி மூலமாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்காக சேவையினை படையினர் வழங்கி வருகின்றனர்.

எதிர்வரும் நாட்களில் ஏற்படக்கூடிய அபாயங்கள்

​மகாவலி கங்கை பெருக்கெடுப்பு மற்றும் மாவிலாறு உடைப்பு காரணமாக, திருகோணமலை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள அதிக நீர்வரத்தினால் உருவாகியுள்ள அசாதாரண சூழ்நிலை தொடர்பாக, திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ விசேட கூட்டம் (01) மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

மேலும், எதிர்வரும் நாட்களில் ஏற்படக்கூடிய அபாயங்களைக் கருத்தில் கொண்டு, ​ஆபத்தான பகுதிகளில் வாழும் பொதுமக்களுக்கு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், ​தேவையான இடமாற்றத் திட்டங்களை மேற்கொள்ளுதல் போன்ற விடயங்கள் தொடர்பாகவும் முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. ​

மாவட்ட நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் ஒருங்கிணைந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும், நிலைமையைக் கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இதன் போது அதிகாரிகள் தெரிவித்தனர்.

வங்காள விரிகுடாவில் ஒரே நேரத்தில் உருவான இரண்டு புயல்கள்: வெளியான காரணம்

வங்காள விரிகுடாவில் ஒரே நேரத்தில் உருவான இரண்டு புயல்கள்: வெளியான காரணம்


GalleryGalleryGallery
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
நன்றி நவிலல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

02 Jun, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, கொழும்பு 13

24 May, 2024
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், Toronto, Canada

31 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US