திருகோணமலையில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் வைத்தியசாலையில் அனுமதி
திருகோணமலை - ஹொரவ்பொத்தானை பிரதான வீதி நொச்சிக்குளம் பகுதியில் டிமோ பட்டா வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 15 பேர் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து நேற்றிரவு (02) 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
15 பேர் வைத்தியசாலையில் அனுமதி
இந்த விபத்தில் கஹடகஸ்திகிலிய பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் காயமடைந்துள்ளதாகவும், அதில் எட்டு பேர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு பகுதிக்கு நிகழ்வொன்றிற்கு சென்று வீடு திரும்பும் போது இவ்விபத்து இடம்பெற்றதாகவும், விபத்து இடம்பெற்றமைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 12 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri
