திருகோணமலையில் விபத்து: இருவர் படு காயம்
திருகோணமலை-ஹொரவ்பொத்தான பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதியதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்து இன்று (28) காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் தனுஷ்க பெரேரா (வயது 28 ) மற்றும் திருகோணமலை-மனையாவெளி பகுதியைச் சிவக்குமார் மதேஷ் (வயது 22) ஆகியோரே விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
குறித்த விபத்தில் காயமடைந்த இருவரும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து தொடர்பிலான விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.