திருகோணமலை முச்சக்கர வண்டி சாரதிகள் அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை
திருகோணமலை முச்சக்கர வண்டி சாரதிகள் தங்களுடைய அன்றாட தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.
வாரத்தில் ஒரு முறை கியூ ஆர் கோட் மூலமாக 5 லீட்டர் பெட்ரோல் கிடைப்பதாகவும், இதனால் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தமது ஜீவனோ பாயத்தை உயர்த்திக்கொள்ள முடியாத நிலையில் நாளுக்கு நாள் கடனாளியாகவே உள்ளாக்கப்பட்டு வருவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

பெட்ரோல் விலை அதிகரிப்பு
பெட்ரோல் விலை அதிகரிப்பு காரணமாக சாரதிகள் தவணைப்பணம் கட்டுவதற்காக கிடைக்கின்ற பணத்தில் ஒதுக்குவதாகவும், உண்பதற்கு போதிய அளவு பணம் இல்லாமையினால் பல குடும்பங்களுக்கு இடையில் முரண்பாடுகள் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு அரசாங்கம் மானிய அடிப்படையில் நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் எனவும் முச்சக்கர வண்டி சாரதிகள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றனர்.
ஆகவே அரசாங்கம் முச்சக்கர வண்டி சாரதிகளின் நலன் கருதி மானிய அடிப்படையில் சில உதவிகளை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri