திருகோணமலையில் மேலதிக வகுப்பிற்கு சென்ற மாணவர்கள் துஷ்பிரயோகம் - ஆசிரியருக்கு விளக்கமறியல்
திருகோணமலையில் மேலதிக வகுப்பிற்கு சென்ற மூன்று ஆண் மாணவர்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் பிரபல ஆங்கில ஆசிரியரொருவரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்ற நீதிபதி பயாஸ் ரசாக் முன்னிலையில் சந்தேகநபரை இன்றைய தினம் (28) முன்னிலைப்படுத்திய போது இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்து ஆசிரியர் தொடர்பில் மாணவர்கள் பெற்றோருக்கு தெரியப்படுத்தியிருந்த போதிலும் பெற்றோர்கள் அதனை பெரிதுப்படுத்தாமல் இருந்த நிலையில் சிறுவர் பாதுகாப்பு நிலையத்திற்கு குறித்த ஆசிரியர் தொடர்பில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உப்புவெளி பொலிஸ் நிலையத்திற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த மாணவர்களின் வாக்குமூலத்தை பெற்றதைடுத்து பிரபல ஆங்கில ஆசிரியரை கைது செய்து திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
இதன்போது குறித்த மாணவர்கள் தொடர்பிலான சட்ட வைத்திய அறிக்கை
நீதிமன்றத்திற்கு கிடைக்கும் வரை எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில்
வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.





புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam
