ஹர்த்தால் நாளில் வழமை போன்று இயங்கிய திருகோணமலை மாவட்டம்
வடக்கு - கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் திருகோணமலை நகரம் வழமை போன்று இயங்கியதாக கூறப்படுகிறது.
குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதினால் சில கடைகள் மூடப்பட்டு இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதிகளவில் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் சில கடைகள் மூடப்பட்டு இருந்ததாகவும் எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.
அனைத்து தரப்பினரும் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்த போதிலும் இன்று காலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபியை நிர்மாணிப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டமையினால் ஹர்த்தால் தேவையில்லை எனவும் சிலர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.