ஆளும் கட்சி எம்.பியை தாக்க முயற்சித்த ஐ.மக்கள் சக்தி எம்.பி - இலங்கை நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமளி (VIDEO)
நாடாளுமன்றம் இன்று முற்பகல் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய போது, அமளியான நிலைமை ஏற்பட்டது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டி ஆராச்சி மீது எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்குதல் நடத்த முயற்சித்ததால் இந்த பதற்றம் ஏற்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, சபைக்கு நடுவில் வந்து, திஸ்ஸ குட்டி ஆராச்சியை தாக்க முயற்சித்துள்ளார். அப்போது அந்த இடத்திற்கு சென்ற சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனை தடுத்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டி ஆராச்சி நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது பெண்களை அவமதிக்கும் வகையில் பேசியமை தொடர்பில் சபாநாயகர் அவரை எச்சரித்திருந்தார்.
உக்ரைன் வான் பரப்பிற்குள் பட்டப்பகலில் நுழைந்த 400 ட்ரோன்கள்: புதிய உத்தியை கையில் எடுக்கும் ரஷ்யா News Lankasri
முடிவுக்கு வரும் சக்திவேல் சீரியல், திங்கள் முதல் மாறப்போகும் விஜய் சீரியல்களின் நேரம்... முழு விவரம் இதோ Cineulagam
கார்க் தீவுக்கு குறி! முக்கிய வான்வழி படைத் தளபதிகள் மத்திய கிழக்கிற்கு அனுப்பும் அமெரிக்கா News Lankasri