பொலிஸாரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய திருட்டு சம்பவம்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
சாரதியைத் தாக்கி முச்சக்கரவண்டியொன்றைத் திருடிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
கொள்ளை சம்பவம்
முச்சக்கரவண்டியை திருடிச் சென்ற குழுவினர் சாரதியிடமிருந்து 11,000 ரூபா பணம், இரண்டு கையடக்கத்தொலைபேசிகள் மற்றும் முச்சக்கரவண்டியின் ஆவணங்களையும் எடுத்துச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மொரகஹதென்ன பொலிஸ் நிலைய அதிகாரிகள் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் முதற்கட்ட விசாரணையில், கொட்டாவ பகுதியிலிருந்து இரவு 9 மணியளவில் குழந்தையுடன் வந்த பெண்ணும் இரு ஆண்களும் முச்சக்கரவண்டியில் ஏறி, தலகல பகுதிக்குச் செல்லுமாறு கூறியுள்ளனர்.
மக்களின் கவனத்துக்கு...
முச்சக்கரவண்டி குறைந்த வெளிச்சம் உள்ள வீதியில் பயணித்தபோது, பின்னால் இருந்து வந்த ஒருவர் முச்சக்கரவண்டி சாரதியின் கண்களை தனது கைகளால் மறைக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
பின்னர் உடனடியாக, சாரதியின் கண்களில் மிளகாய் தூளால் தாக்கி சாரதியை வாகனத்திலிருந்து தள்ளிவிட்டதாக முச்சக்கரவண்டி சாரதி தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, இச்சம்பவம் குறித்து பொலிஸார் தெரிவித்துள்ளாவது, இதுபோன்ற கொள்ளை சம்பவங்கள் அவ்வப்போது நடப்பதாகவும், வாடகைக்கு எடுக்கப்பட்ட முச்சக்கரவண்டிகளின் சாரதிகள் இரவில் கவனமாக பயணம் மேற்கொள்ள வேண்டும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 21 மணி நேரம் முன்

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

8 மடங்கு வேகமாக தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.., இந்தியாவால் பாகிஸ்தான், சீனாவுக்கு சிக்கல் News Lankasri

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam
