கட்டுப்பாடுகளை மீறி வவுனியாவிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களினால் அஞ்சலி
இலங்கையில் இடம்பெற்ற கோர யுத்தம் நிறைவுற்று இன்றுடன் 12 வருடங்கள் நிறைவு பெறுகின்றன.
தற்போது நாட்டில் பரவி வரும் கோவிட் தொற்றின் மூன்றாம் அலையின் காரணமாக யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களிற்கு முள்ளிவாய்க்காலில் நினைவஞ்சலி நடத்தப்படக் கூடாது என தடைகள் ஏற்படுத்தப்பட்ட நிலையில், அதையும் மீறி இன்று அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலையில் வவுனியாவிலும் அஞ்சலி நிகழ்வுகள் ஆங்காங்கே முன்னெடுக்கப்பட்டுள்ளன.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இணைந்து வவுனியாவில் அஞ்சலி நிகழ்வினை நடத்தியிருந்தனர்.