இலங்கையின் பிரபல கலைஞருக்கு மட்டக்களப்பில் அஞ்சலி (VIDEO)
அண்மையில் உயிரிழந்த இலங்கையின் புகழ்பெற்ற கலைஞர் தர்மராஜ்தர்சனுக்கு மட்டக்களப்பில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கலைஞர்கள் இணைந்து இந்த அஞ்சலி நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளனர்.
அஞ்சலி
மட்டக்களப்பு, லொயிட்ஸ் அவனியுவில் உள்ள ராவணா ஸ்டூடியோ மண்டபத்தில் திரைப்படக் கலைஞர் ஜனா தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இதன்போது கலைஞர் தர்மராஜ் தர்சனின் உருவப்படத்திற்கு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.
நினைவுரைகள்
அதனை தொடர்ந்து கலைஞர்களினால் நினைவுரைகள் நிகழ்த்தப்பட்டதுடன் கலைஞர் தர்மராஜ் தர்சன் தொடர்பான நினைவுகளும் கருத்துப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பாகங்களிலும் உள்ள கலைஞர்கள்
கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.